Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

உயிரிழைக்கு நோயாளர்காவுவண்டி வழங்கப்பட்டது

உயிரிழைக்கு நோயாளர்காவுவண்டி வழங்கப்பட்டது

எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளுக்கான நீன்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. எமது அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து எமது பயனாளிகளின் அவசர மருத்துவ சேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டோம். நாம் இதற்காக முச்சக்கரவண்டிகளிலும் வாடகை வாகனங்களிலும்  மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் எமது தேவைகளை நிறைவேற்றி வந்தோம். சம நேரத்தில் எமக்கான நோயாளர் காவு வண்டி ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் இறங்கியிருந்தோம். அதன் பலன் இன்று எமக்குக் கிடைத்திருக்கின்றது. எமது உயிரிழை அமைப்புக்கான நோயாளர் காவு வண்டி ஒன்றினை Australian Tamil Union  மற்றும் அவுஸ்ரேலியா வாழ் மக்கள் இணைந்து பெற்றுத் தந்துள்ளார்கள். இதற்கான நிகழ்வு 27.09.2023 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில்  நடைபெற்றது . அன்றைய நாளில் எமக்கான வாகனம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இது எமது அமைப்புக்கு உண்மையில் ஒரு மகிழ்ச்சியான தருணமே. எனவே, இந்த மானுட மனிதநேயப் பணிக்காக உழைத்த ஒவ்வொரு அன்பான உள்ளத்துக்கும் Australian Tamil Union அமைப்பினருக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எமது உயிரிழை அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *