5ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நீலாம்பிகை தியாகராசா அவர்களின்
ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் – 29/09/2025
அமரர் நீலாம்பிகை தியாகராசா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையும்,
அவரது பேரனின் 25ஆம் ஆண்டு பிறந்த தினத்தையும் முன்னிட்டு,
உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு விசேட உணவு வழங்குவதற்கும் மருத்துவ தேவைகளுக்குமான செலவுகளுக்காகவும்
நோர்வே நாட்டில் வசிக்கும் அன்னாரின் மகள் திருமதி சித்திரா குகனேசன் அவர்கள்
ரூ. 35,000/- நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
எமது உயிரிழை அமைப்பினர் சார்பாக, அன்னாரின் மகளுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும், இந்நிதி உதவி உயிரிழை அமைப்பின் பயனாளியும் முன்னாள் தலைவருமான
திரு செல்வரத்தினம் ஆனந்தராசா அவர்களின் மூலம் எமக்குக் கிடைக்கப்பெற்றது.
அதனை எமக்கு பெற்று வழங்கியதற்காக அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இத்தருணத்தில்,
அமரர் நீலாம்பிகை தியாகராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய
உயிரிழை அமைப்பின் பயனாளிகள் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.