Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

🕊️இரங்கல் அறிவிப்பு🕊️

🕊️இரங்கல் அறிவிப்பு🕊️

இராசையா சிவகுமார்
(பிறப்பு 01/11/1984 –  இறப்பு 25.09.2025)

முகவரி:
மூன்றாம் வட்டாரம், முள்ளியவளை கிழக்கு,
கரைத்துறைப்பற்று, முல்லைத்தீவு.

25/09/2025 அன்று
மேற்கண்ட முகவரியைச் சேர்ந்த
இராசையா சிவகுமார் அவர்கள்
இறைவனடி சேர்ந்த செய்தி
உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட
அத்தனை உறவுகளையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த துயரமான வேளையில்
அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும்
உயிரிழை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும்
நிர்வாகத்தினர் சார்பாக
எமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌹 மறைந்த இராசையா சிவகுமார்சிறப்பு நினைவுரை 🌹

2017 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆகஸ்ட் மாதம் வரை
உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்லத்தில் வாழ்ந்து வந்த
இராசையா சிவகுமார் அவர்கள்,
அங்கு தன்னால் ஆன செயற்பாடுகளைச் செய்து வந்தார் என்பது
நாம் அனைவரும் பெருமையுடன் நினைவுகொள்ள வேண்டிய ஒன்று.

வாழை, கொய்யா, தேசி, அன்னாசி, கரும்பு உள்ளிட்ட
பல மரங்களையும் பயிர்களையும் அன்போடு பராமரித்து,
அமைப்பு பயன்பெறும் நிலையை உருவாக்கினார்.

சிறு கடுகாசி பைகளை வெட்டி ஒட்டி,
மருத்துவத் தேவைக்காக தொடர்ந்து வழங்கி,
அமைப்பின் நலனில் பங்களித்தார்.

 கடதாசி கைவினைப் பொருட்கள், சிரட்டையில் வடிவமைப்புகள் போன்ற
செயற்பாடுகளில் தனது கலைநயத்தைக் காட்டியதோடு,
அவற்றை விற்று வருமானத்தை அமைப்புக்கும் கொடுத்து
தன்னையும் சுயசார்புடன் வாழ வைத்தார்.

 அமைப்பின் பணியாளர்களுடன் இணைந்து
சிறிய காய்கறித் தோட்டத்தை வளர்த்து,
அதிலிருந்து கிடைத்த பயன்களை அமைப்புக்கே வழங்கியவர்.

சொல்லப் போனால்தன்னால் இயன்றதை,
அமைப்பிற்கும், சுற்றுப்புறத்திற்கும்,
சமூக நலனுக்குமான பங்களிப்பாகவே மாற்றி வாழ்ந்தவர்.

இவர் வாழ்க்கை,
“உடலால் இயலாதபோதும்,
உள்ளம் விரும்பினால் எதையும் செய்யலாம்” என்ற
உண்மையை நிரூபித்துச் சென்றிருக்கிறது.

 இத்தகைய நற்குணங்களும் பங்களிப்புகளும்
எல்லோருக்கும் உத்வேகம் அளிப்பவை.
இவரது மறைவு எங்களை சோகத்தில் ஆழ்த்தினாலும்,
அவரது நினைவு எப்போதும் எமக்குள்
மின்னும் ஒளியாக நிலைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *